இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி மன்றாடுவது வேதாகமத்தின் படியானதா?

கேள்வி இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி மன்றாடுவது வேதாகமத்தின் படியானதா? பதில் ஜெபத்தில் “இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி மன்றாடுதல்” என்பது வேர்ட் ஆஃப் ஃபெயித் (Word of Faith) இயக்கத்தின் ஆரம்பகால தலைவர்களில் சிலருக்கு ஒரு போதனையாகும். “ஜெபத்தில் இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி மன்றாடுவது” என்று ஜனங்கள் பேசும்போது, “நான் _______ மீது இயேசுவின் இரத்தத்தை மன்றாடுகிறேன்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி எந்தவொரு மற்றும் ஒவ்வொரு பிரச்சனையிலும் கிறிஸ்துவின் வல்லமையைக் “கோரி” ஏறெடுக்கப்படும் மன்றாட்டு நடைமுறையைக் குறிப்பிடுகின்றனர். “இயேசுவின்…

கேள்வி

இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி மன்றாடுவது வேதாகமத்தின் படியானதா?

பதில்

ஜெபத்தில் “இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி மன்றாடுதல்” என்பது வேர்ட் ஆஃப் ஃபெயித் (Word of Faith) இயக்கத்தின் ஆரம்பகால தலைவர்களில் சிலருக்கு ஒரு போதனையாகும். “ஜெபத்தில் இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி மன்றாடுவது” என்று ஜனங்கள் பேசும்போது, “நான் _______ மீது இயேசுவின் இரத்தத்தை மன்றாடுகிறேன்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி எந்தவொரு மற்றும் ஒவ்வொரு பிரச்சனையிலும் கிறிஸ்துவின் வல்லமையைக் “கோரி” ஏறெடுக்கப்படும் மன்றாட்டு நடைமுறையைக் குறிப்பிடுகின்றனர்.

“இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி மன்றாடுதல்” என்பதற்கு வேதத்தில் எந்த அடிப்படையும் இல்லை. வேதாகமத்தில் உள்ள எவரும் கிறிஸ்துவின் இரத்தத்தை “கேட்கவில்லை”. “இரத்தத்தைச் சொல்லி மன்றாடுபவர்கள்” அந்த வார்த்தைகளில் ஏதோ மந்திரம் இருப்பது போல் அல்லது அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் ஜெபம் எப்படியாவது அதிக வல்லமை வாய்ந்தது போல் நினைத்து அப்படிச் செய்கிறார்கள். இந்த போதனை ஜெபத்தின் தவறான மற்றும் துருபதேசப் பார்வையில் இருந்து பிறந்தது, ஜெபம் உண்மையில் தேவனுடைய சித்தம் செய்யப்பட வேண்டும் என்று ஜெபிப்பதை விட நாம் விரும்புவதைப் பெற தேவனைக் கையாளும் ஒரு வழியைத் தவிர வேறில்லை. விசுவாசம் என்பது ஒரு வல்லமை என்ற தவறான போதனையின் அடிப்படையில் முழு விசுவாச இயக்கமும் நிறுவப்பட்டது, போதுமான விசுவாசத்துடன் நாம் ஜெபித்தால், தேவன் நமக்கு ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியைத் தருவதாக உத்தரவாதம் செய்கிறார், மேலும் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும் நம்மை விடுவிப்பார். இந்தக் கண்ணோட்டத்தில், வேதாகமம் அவரை வெளிப்படுத்தும் பரிசுத்தமான, இறையாண்மையுள்ள, பரிபூரணமான மற்றும் நீதியுள்ள சிருஷ்டிகராக இருப்பதற்குப் பதிலாக நாம் விரும்புவதைப் பெறுவதற்கான ஒரு வழியாகத் தேவன் எண்ணப்படுகிறார்.

இந்த விசுவாசத்தின் வார்த்தையைப் பொய்யாகக் கற்பிப்பவர்கள் மனிதனைப் பற்றிய உயர்ந்த பார்வையையும், நாம் விரும்புவதை மன்றாடுவதற்கும், நாம் விரும்பும் வழியில் தேவனைப் பதிலளிப்பதற்கும் தங்களது “உரிமை”யைக் கொண்டுள்ளனர். இது பவுலின் வாழ்க்கையிலும், துன்பம் மற்றும் சோதனைகளுக்கான அணுகுமுறையிலும் எடுத்துக்காட்டப்பட்ட உண்மையான வேதாகம விசுவாசத்திற்கு எதிரானது. பவுல் 2 தீமோத்தேயுவில் எழுதினார், “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2 தீமோத்தேயு 3:12). ஆனால், நாம் துன்பப்பட்டால் அல்லது நோய்வாய்ப்பட்டால் அல்லது பாவத்துடன் போராடினால், அது நமக்கு போதுமான விசுவாசம் இல்லாததால் அல்லது நமக்கானதை உரிமையாகக் கோருவதற்கு இயேசுவின் இரத்தத்தை நாம் மன்றாடவில்லை என்று விசுவாச வார்த்தை கற்பிக்கிறது. ஆனால், பவுல் கிறிஸ்துவின் இரத்தத்தை மன்றாடுவதையோ அல்லது சோதனைகள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டபோது “சரியாக அவருடையது” என்று கூறுவதையோ நாம் காணவில்லை. மாறாக, எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்துவின் மீது அவர் வைத்திருந்த அசையாத விசுவாசத்தைக் காண்கிறோம்: “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:12).

பவுல் “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:11-13). பவுலின் விசுவாசம் கிறிஸ்துவில் மட்டுமே இருந்தது, மேலும் அவர் உறுதியாகச் சொல்ல முடியும், “கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்!” (2 தீமோத்தேயு 4:18).

பொதுவாக நடைமுறையில் உள்ள “இரத்தத்தைச் சொல்லி மன்றாடுதல்” என்பது வேதாகம ஜெபத்தை விட மாயவாதத்துடன் பொதுவானது-ஒரு மந்திர சூத்திரத்தை ஓதுவது மற்றும் அது செயல்படும் என்று நம்புவது. சில வார்த்தைகளைக் கூறுவது நமது ஜெபங்களை மந்திர சக்தியாக மாற்றாது. மேலும், சாத்தானை தோற்கடிக்க கிறிஸ்துவின் “இரத்தத்தைச் சொல்லி மன்றாடுவது” தேவையில்லை. அவன் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டான், நாம் உண்மையிலேயே மீண்டும் பிறந்தவர்களானால், தேவன் தனது நோக்கத்திற்காகவும் மகிமைக்காகவும் அனுமதிப்பதைத் தவிர சாத்தானுக்கு நம்மீது எந்த அதிகாரமும் இல்லை. கொலோசெயர் 1:13 இதை முற்றிலும் தெளிவுபடுத்துகிறது: “அவர் நம்மை இருளின் அதிகாரத்தினின்று விடுவித்து, தம்முடைய அன்பான குமாரனுடைய ராஜ்யத்தில் நம்மை மாற்றினார், அவருடைய இரத்தத்தினாலே நமக்கு பாவமன்னிப்பு உண்டு.”

பாதுகாப்பிற்காக அல்லது அதிகாரத்திற்காக கிறிஸ்துவின் “இரத்தத்தைச் சொல்லி மன்றாடுவதற்கு” பதிலாக, கிறிஸ்தவர்கள் யாக்கோபு 4:7 இல் உள்ள கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும், “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” வேதாகமத்திற்கு மாறான ஜெபத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, நாம் வேதத்தின் எளிய கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் – தேவனுக்கு முன்பாக ஒரு பரிசுத்த வாழ்க்கையை நடத்துவது, பாவத்திற்கு இடம் கொடுக்காமல் இருக்க நம் எல்லா எண்ணங்களையும் சிறைபிடிப்பது, அந்த முதல் இரண்டு கட்டளைகளை நாம் தவறினால் பாவங்களை அறிக்கை செய்வது, மற்றும் எபேசியர் 6:13-17 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை அணிந்துகொள்ளவேண்டும்.

கிறிஸ்துவில் வெற்றிகரமான வாழ்வில் வேதாகமம் நமக்கு பல அறிவுரைகளை அளிக்கிறது, மேலும் “இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி” மன்றாடுவது அவற்றில் ஒன்றல்ல. கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் சுத்திகரிக்கப்பட்டோம், அவர் நமக்காக “எப்பொழுதும் பரிந்து பேசுகிறார்” (எபிரெயர் 7:25) அவர் நம்முடைய பிரதான ஆசாரியரும் மத்தியஸ்தருமானவர். அவருடைய ஆடுகளாகிய நாம் ஏற்கனவே அவருடைய பாதுகாப்பில் இருக்கிறோம்; அவர் ஏற்கனவே வாக்குறுதி அளித்து வழங்கியதற்காக நாம் அவரை நம்பி ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும்.

[English]



[முகப்பு பக்கம்]

இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி மன்றாடுவது வேதாகமத்தின் படியானதா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.