இயேசு மட்டுமே / ஒன்றான பெந்தகொஸ்தேக்களின் நம்பிக்கைகள் என்ன?

கேள்வி இயேசு மட்டுமே / ஒன்றான பெந்தகொஸ்தேக்களின் நம்பிக்கைகள் என்ன? பதில் “இயேசு மட்டுமே” இயக்கம், ஒன்றான பெந்தேகோஸ்தே அல்லது ஒன்றான இறையியல் என்றும் அறியப்படுகிறது, தேவன் ஒருவரே என்று போதிக்கிறது, ஆனால் தேவனுடைய மூன்று ஆள்தன்மைகளின் ஒற்றுமையை மறுக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒன்றான இறையியல் தேவனுடைய தனித்துவமான மூன்று நபர்களை அங்கீகரிக்கவில்லை: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர். இது பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது—சிலர் இயேசு கிறிஸ்துவை ஒரே தேவனாகப் பார்க்கிறார்கள், அவர் சில…

கேள்வி

இயேசு மட்டுமே / ஒன்றான பெந்தகொஸ்தேக்களின் நம்பிக்கைகள் என்ன?

பதில்

“இயேசு மட்டுமே” இயக்கம், ஒன்றான பெந்தேகோஸ்தே அல்லது ஒன்றான இறையியல் என்றும் அறியப்படுகிறது, தேவன் ஒருவரே என்று போதிக்கிறது, ஆனால் தேவனுடைய மூன்று ஆள்தன்மைகளின் ஒற்றுமையை மறுக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒன்றான இறையியல் தேவனுடைய தனித்துவமான மூன்று நபர்களை அங்கீகரிக்கவில்லை: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர். இது பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது—சிலர் இயேசு கிறிஸ்துவை ஒரே தேவனாகப் பார்க்கிறார்கள், அவர் சில சமயங்களில் பிதாவாகவோ அல்லது பரிசுத்த ஆவியானவராகவோ தன்னை வெளிப்படுத்துகிறார் என்கிறார்கள். ஒன்றான பெந்தகோஸ்தே / இயேசு மட்டுமே என்பதன் முக்கிய கோட்பாடு இயேசுவே பிதாவானவர் மற்றும் இயேசுவே பரிசுத்த ஆவியானவர் என்பதாகும். அதாவது தேவன் ஒருவரே, அவர் வெவ்வேறு “முறைகளில்” தன்னை வெளிப்படுத்தும் தேவனாக இருக்கிறார்.

இயேசு மட்டுமே / ஒன்றான பெந்தேகொஸ்தேக்களின் இந்த போதனை பல நூற்றாண்டுகளாக, ஒரு வடிவத்தில் அல்லது மற்றொரு வடிவமாக உள்ளது. தேவன் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களில் அல்லது முறைகளில் செயல்பட்டார் என்று மோடலிசம் போதிக்கிறது—அதாவது சில சமயங்களில் பிதாவாகவும், சில சமயங்களில் குமாரனாகவும், சில சமயங்களில் பரிசுத்த ஆவியானவராகவும் செயல்பட்டார். ஆனால் மத்தேயு 3:16-17 போன்ற பகுதிகள், இரண்டு அல்லது மூன்று தேவனுடைய நபர்கள் ஒரே நேரத்தில் உள்ளனர் என்பதை வலியுறுத்துகிறது, இது மாதிரியான பார்வைக்கு முரணானது. இரண்டாம் நூற்றாண்டிலேயே மோடலிசம் துர்உபதேசம் என்று கண்டனம் செய்யப்பட்டது. தேவன் கண்டிப்பாக வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களில் செயல்படும் ஒரு தனி நபர் என்ற கருத்துக்கு எதிராக ஆரம்பகால திருச்சபை கடுமையாக வாதிட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வீக ஆள்தன்மை கொண்ட நபர்கள் ஒரே நேரத்தில் காணப்படுவதாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி தொடர்பு கொள்வதாலும் தேவனுடைய திரித்துவ ஒற்றுமை தெளிவாகத் தெரிகிறது என்று அவர்கள் வேதத்திலிருந்து வாதிட்டனர் (எடுத்துக்காட்டுகள்: ஆதியாகமம் 1:26; 3:22;11:7; சங்கீதம் 2:7; 104:30; 110:1; மத்தேயு 28:19; யோவான் 14:16). ஒன்றான பெந்தேகோஸ்தேவாதம் / இயேசு மட்டுமே கோட்பாடு வேதாகமத்திற்கு எதிரானது.

மறுபுறம், தேவனுடைய திரியேக-ஒற்றுமை பற்றிய கருத்து வேதம் முழுவதும் உள்ளது. இது வரையறுக்கப்பட்ட மனதால் எளிதில் கிரகிக்கப்படும் ஒரு கருத்து அல்ல. மனிதன் தனது இறையியலில் அனைத்தையும் புரிந்து கொள்ள விரும்புவதால், இயேசு மட்டுமே இயக்கம் போன்ற இயக்கங்கள்—குறிப்பாக யெகோவாவின் சாட்சிகளைப் போன்றவர்கள்—தேவனுடைய இயல்பை விளக்குவதற்கு வழக்கமாக எழுகின்றன. நிச்சயமாக, வேதாகம பகுதிக்கு வன்முறை செய்யாமல் இதைச் செய்ய முடியாது. தேவனுடைய இயல்பு, நாம் அவருக்கு வைக்க விரும்பும் வரம்புகளுக்கு உட்பட்டது அல்ல என்பதை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசாயா 55:8-9). அவருடைய எண்ணங்களையும் வழிகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அவருடைய இயல்பையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறோம்.

[English]



[முகப்பு பக்கம்]

இயேசு மட்டுமே / ஒன்றான பெந்தகொஸ்தேக்களின் நம்பிக்கைகள் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.