பூமியில் மட்டுமே உ

கேள்வி பூமியில் மட்டுமே உயிர்கள் இருந்தால் தேவன் ஏன் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் மற்ற கிரகங்களையும் சிருஷ்டித்தார்? பதில் தேவன் மற்ற கிரகங்களில் உயிர்களைப் படைத்தாரா என்ற கேள்வி நிச்சயமாக கவர்ச்சிகரமானது. சங்கீதம் 19:1, “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” என்று கூறுகிறது. நீங்களும் நானும், வனவிலங்குகள், தேவதூதர்கள், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் என தேவன் படைத்த அனைத்தும் அவருடைய மகிமைக்காகப் படைக்கப்பட்டவை. பால்வெளி மூச்சடைக்கக் கூடிய காட்சியை அல்லது…

கேள்வி

பூமியில் மட்டுமே உயிர்கள் இருந்தால் தேவன் ஏன் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் மற்ற கிரகங்களையும் சிருஷ்டித்தார்?

பதில்

தேவன் மற்ற கிரகங்களில் உயிர்களைப் படைத்தாரா என்ற கேள்வி நிச்சயமாக கவர்ச்சிகரமானது. சங்கீதம் 19:1, “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” என்று கூறுகிறது. நீங்களும் நானும், வனவிலங்குகள், தேவதூதர்கள், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் என தேவன் படைத்த அனைத்தும் அவருடைய மகிமைக்காகப் படைக்கப்பட்டவை. பால்வெளி மூச்சடைக்கக் கூடிய காட்சியை அல்லது டெலஸ்கோப் மூலம் சனிக்கோளை உற்றுப் பார்க்கும்போது, தேவனுடைய அற்புதங்களைக் கண்டு வியக்கிறோம்!

தாவீது சங்கீதம் 8:3ல் எழுதினார், “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது.” ஏராளமான நட்சத்திரங்களைப் பார்க்கும் போது, விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களைக் கண்டுபிடித்துள்ளனர், ஒவ்வொன்றும் மில்லியன் கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருப்பதாகக் காண்கிறோம், அதையெல்லாம் உருவாக்கி, அதை அவருடைய விரல்களின் செயல் என்று அழைக்கும் அளவுக்கு மகத்தான தேவனுக்கு பயப்பட வேண்டும்! மேலும், சங்கீதம் 147:4 நமக்குச் சொல்கிறது, “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.” எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன என்பதை மனிதகுலம் அறிய இயலாது; எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரையும் கடவுள் அறிவார்! “என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்” (ஏசாயா 48:13).

விண்வெளியும் கோள்களும் தேவனுடைய மகிமைக்காகவே படைக்கப்பட்டன. நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே நட்சத்திரங்களும் கோள்களும் இருப்பதை நாம் அறிவோம், இவையும் தேவனுடைய மகிமைக்காக உருவாக்கப்பட்டவை. தொடர்ந்து விரிவடையும் பிரபஞ்சம் என்பது இன்னும் நிரூபிக்கப்படாத மற்றொரு அனுமானமாகும். சூரியனை விட அடுத்த நட்சத்திரம் 4 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது, மேலும் அது விரிவடைந்தாலும் இல்லாவிட்டாலும் அறியப்பட்ட பிரபஞ்சத்தின் அளவின் ஒரு பகுதி கூட இல்லை.

மற்ற கிரகங்களில் உயிர்கள் இருக்கிறதா என்பது நமக்குத் தெரியாது. இதுவரை, நமது சூரிய குடும்பத்தின் மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இறுதிக் காலம் நெருங்கி வருவதைக் கருத்தில் கொண்டு, கர்த்தர் திரும்புவதற்கு முன் மற்ற விண்மீன் திரள்களைப் பார்வையிடும் அளவுக்கு மனிதன் முன்னேறுவது சாத்தியமில்லை. உயிர் எங்கு இருக்கிறதோ அல்லது இல்லையோ, கடவுள் இன்னும் எல்லாவற்றையும் படைத்தவர் மற்றும் கட்டுப்படுத்துபவர், மேலும் அனைத்தும் அவருடைய மகிமைக்காக உருவாக்கப்பட்டன.

[English]



[முகப்பு பக்கம்]

பூமியில் மட்டுமே உயிர்கள் இருந்தால் தேவன் ஏன் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் மற்ற கிரகங்களையும் சிருஷ்டித்தார்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.