முடிவுகள் நியாயப்படுத்துதல் வழிமுறை யாவை?

கேள்வி முடிவுகள் நியாயப்படுத்துதல் வழிமுறை யாவை? பதில் இந்த கேள்விக்கான பதில், என்ன முடிவுகள் அல்லது இலக்குகள் என்பதையும் மற்றும் அவற்றை அடைய என்ன வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் பொறுத்தது. இலக்குகள் நல்லதாகவும், உன்னதமானதாகவும் இருந்தால், அவற்றை அடைவதற்கு நாம் பயன்படுத்தும் வழிமுறைகள் நல்லதாகவும், உயர்வானதாகவும் இருந்தால், ஆம், நோக்கங்கள் வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலான மக்கள் வெளிப்பாட்டைப் பயன்படுத்தும்போது அதை அர்த்தப்படுத்துவதில்லை. எவ்வளவு ஒழுக்கக்கேடான, சட்ட விரோதமான அல்லது விரும்பத்தகாத வழிமுறையாக இருந்தாலும், தேவையான எந்த…

கேள்வி

முடிவுகள் நியாயப்படுத்துதல் வழிமுறை யாவை?

பதில்

இந்த கேள்விக்கான பதில், என்ன முடிவுகள் அல்லது இலக்குகள் என்பதையும் மற்றும் அவற்றை அடைய என்ன வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் பொறுத்தது. இலக்குகள் நல்லதாகவும், உன்னதமானதாகவும் இருந்தால், அவற்றை அடைவதற்கு நாம் பயன்படுத்தும் வழிமுறைகள் நல்லதாகவும், உயர்வானதாகவும் இருந்தால், ஆம், நோக்கங்கள் வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலான மக்கள் வெளிப்பாட்டைப் பயன்படுத்தும்போது அதை அர்த்தப்படுத்துவதில்லை. எவ்வளவு ஒழுக்கக்கேடான, சட்ட விரோதமான அல்லது விரும்பத்தகாத வழிமுறையாக இருந்தாலும், தேவையான எந்த வழியிலும் தங்கள் இலக்குகளை அடைய பெரும்பாலானோர் இதை ஒரு சாக்காகப் பயன்படுத்துகின்றனர். இந்த வெளிப்பாடு பொதுவாக எதைக் குறிக்கிறது என்பது “நீங்கள் விரும்புவதைப் பெறுகிற வரையில் எப்படி நீங்கள் விரும்புவதைப் பெறுவது என்பது முக்கியமல்ல.”

“வழிமுறைகளை நியாயப்படுத்தும் முடிவுகள்” என்பது பொதுவாக ஒரு நேர்மறையான முடிவை அடைய ஏதாவது தவறு செய்வதையும், ஒரு நல்ல முடிவை சுட்டிக்காட்டுவதன் மூலம் தவறான செயலை நியாயப்படுத்துவதையும் உள்ளடக்குகிறது. ஒரு உதாரணம், ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்காக ஒரு விண்ணப்பத்தில் பொய்யை சொல்லுவதும், பொய்யை நியாயப்படுத்துவதும், தனது குடும்பத்திற்கு போதுமான அளவு வழங்க முடியும் என்ற நோக்கில் பெரிய வருமானம் பெற பொய் சொல்லுவது. மற்றொருவர் தாயின் உயிரைக் காப்பாற்ற ஒரு குழந்தையின் கருக்கலைப்பை நியாயப்படுத்தலாம். பொய் சொல்வதும் ஒரு அப்பாவி உயிரை எடுப்பதும் தார்மீக ரீதியாக தவறு, ஆனால் ஒருவரின் குடும்பத்திற்கு வழங்குவதும் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதும் தார்மீக ரீதியாக சரியானது. அப்படியானால், ஒருவர் எங்கே கோடு வரைவார்?

நெறிமுறை விவாதங்களில் முடிவுகள்/வழிமுறைகள் குழப்பம் என்பது பிரபலமான காட்சியாகும். பொதுவாக, கேள்வி இது போன்றது: “ஒருவரைக் கொல்வதினால் நீங்கள் உலகை இரட்சிக்க முடியுமானால், அதைச் செய்வீர்களா?” பதில் “ஆம்” என்றால், தார்மீக ரீதியாக சரியான விளைவு அதை அடைவதற்கு ஒழுக்கக்கேடான வழிமுறைகளைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறது. ஆனால் அத்தகைய சூழ்நிலையில் கருத்தில் கொள்ள வேண்டிய மூன்று வெவ்வேறு விஷயங்கள் உள்ளன: செயலின் ஒழுக்கம், விளைவின் ஒழுக்கம் மற்றும் செயலைச் செய்யும் நபரின் ஒழுக்கம். இந்த சூழ்நிலையில், நடவடிக்கை (கொலை) தெளிவாக ஒழுக்கக்கேடானது மற்றும் கொலைகாரனாகிறார். ஆனால் உலகை இரட்சிப்பது ஒரு நல்ல மற்றும் தார்மீக விளைவு. அல்லது அதுவா? கொலைகாரர்கள் எப்போது, கொலையை நியாயப்படுத்துவது என்பதை முடிவு செய்து, பின்னர் விடுதலையாகி விடுவார்களானால், எப்படிப்பட்ட உலகம் இரட்சிக்கப்படுகிறது? அல்லது கொலைகாரன் தான் இரட்சித்த உலகில் செய்த குற்றத்திற்கு தண்டனையை எதிர்கொள்கிறானா? மேலும் இரட்சித்த உலகம் தன்னைக் காப்பாற்றியவரின் உயிரைப் பறிப்பது நியாயமானதா?

ஒரு வேதாகம நிலைப்பாட்டில், நிச்சயமாக, இந்த விவாதத்தில் காணாமல் போனது தேவனுடைய தன்மை, தேவனுடைய பிரமாணம் மற்றும் தேவனுடைய பாதுகாப்பு. தேவன் நல்லவர், பரிசுத்தர், நீதியானவர், இரக்கமுள்ளவர், நீதியுள்ளவர் என்பதை நாம் அறிந்திருப்பதால், அவருடைய நாமத்தைத் தாங்கியவர்கள் அவருடைய குணாதிசயத்தைப் பிரதிபலிக்க வேண்டும் (1 பேதுரு 1:15-16). கொலை, களவு, திருட்டு, மற்றும் அனைத்து வகையான பாவ நடத்தைகளும் மனிதனின் பாவத் தன்மையின் வெளிப்பாடு, தேவனுடையத் தன்மை அல்ல. கிறிஸ்துவால் சுபாவம் மாற்றப்பட்ட ஒரு கிறிஸ்தவருக்கு (2 கொரிந்தியர் 5:17), ஒழுக்கக்கேடான நடத்தையை நியாயப்படுத்த முடியாது, அதற்கான உந்துதல் அல்லது அதன் விளைவு எதுவாக இருந்தாலும் சரி. இந்தப் பரிசுத்தமும் பரிபூரணமுமான தேவனிடமிருந்து, அவருடைய பண்புகளைப் பிரதிபலிக்கும் ஒரு பிரமாணத்தைப் பெறுகிறோம் (சங்கீதம் 19:7; ரோமர் 7:12). கொலை, விபச்சாரம், களவு, பொய் மற்றும் பேராசை ஆகியவை தேவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை பத்து கட்டளைகள் தெளிவுபடுத்துகின்றன, மேலும் அவர் உந்துதல் அல்லது பகுத்தறிவுக்கான “தப்பிக்கும் விதி” எதையும் செய்யவில்லை. “கொலை செய்யாதே, அவ்வாறு செய்வதன் மூலம் நீ ஒரு உயிரைக் காப்பாற்றுவாய்” என்று அவர் கூறவில்லை என்பதைக் கவனியுங்கள். இது “சூழ்நிலை நெறிமுறைகள்” என்று அழைக்கப்படுகிறது, மேலும் தேவனுடைய பிரமாணத்தில் இதற்கு இடமில்லை. எனவே, தெளிவாக, தேவனுடைய கண்ணோட்டத்தில் அவரது பிரமாணத்தை மீறுவதற்கான வழிமுறைகளை நியாயப்படுத்தும் எந்த முடிவுகளும் இல்லை.

மேலும் முடிவுகள்/வழிமுறை நெறிமுறைகள் விவாதத்தின் முடிவுகளில் விடுபட்டிருப்பது தேவனுடைய பராமரிப்பைப் பற்றிய புரிதலாகும். தேவன் வெறுமனே உலகைப் படைத்து, அதை ஜனங்களால் நிரப்பி, பின்னர் அவரிடமிருந்து எந்த மேற்பார்வையும் இல்லாமல் அவர்களைத் தாங்களே குழப்பிக் கொள்ள விட்டுவிடவில்லை. மாறாக, தேவன் மனிதகுலத்திற்கான ஒரு திட்டத்தையும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறார், அதை அவர் பல நூற்றாண்டுகளாக நிறைவேற்றி வருகிறார். வரலாற்றில் ஒவ்வொரு நபரும் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக அந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. அவர் இந்த உண்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறார்: “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்” (ஏசாயா 46:10-11). தேவன் தனது படைப்பில் நெருக்கமாக ஈடுபட்டு அதன் மீது கட்டுப்பாட்டில் உள்ளார். மேலும், அவர் தம்மை நேசிப்பவர்களுக்கும், அவருடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் நன்மையுண்டாகும்பொருட்டு எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்கிறார் என்று அவர் கூறுகிறார் (ரோமர் 8:28). சுயவிவரத்தில் பொய் சொல்லுதல் அல்லது குழந்தையை கருவிலே கருக்கலைக்கும் ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய பிரமாணத்தை மீறுகிறார், மேலும் அவர் அவ்வாறு செய்ய நினைத்தால் ஒரு குடும்பத்தை போஷித்து அதற்கு வழங்குவதற்கும் ஒரு தாயின் உயிரைப் பாதுகாப்பதற்கும் எனக்கூறி அவருடைய திறனை மறுப்பார்.

தேவனை அறியாதவர்கள் தங்கள் வழியை நியாயப்படுத்த நிர்பந்திக்கப்படலாம், ஆனால் தேவனுடைய பிள்ளைகள் என்று கூறிக்கொள்பவர்கள் தேவனுடைய கட்டளைகளில் ஒன்றை மீறவோ, அவருடைய இறையாண்மை நோக்கத்தை மறுக்கவோ அல்லது அவருடைய நாமத்துக்கு அவமானத்தைக் கொண்டுவரவோ எந்த காரணமும் இல்லை.

[English]



[முகப்பு பக்கம்]

முடிவுகள் நியாயப்படுத்துதல் வழிமுறை யாவை?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.